கெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார். புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் […]

Continue Reading

எங்களுக்குள் பிரிவினை இல்லை- பா.ரஞ்சித்!

தி.நகர் சர்.பி.டி.தியாகராய ஹாலில் “அறம்”, “விழித்திரு”, “ஜோக்கர்” படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜு முருகன் ஆகியோருக்கு “விடுதலை கலை இலக்கிய பேரவை” மற்றும் “மருதம் கலைக்கூடம்” இணைந்து பாராட்டு விழா நடத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் பல நாட்களாய் நிலவி வந்த புரளிக்கு கோபி நயினார் […]

Continue Reading

விழித்திரு – உண்மையை கதைப்படுத்தி இருக்கும் கலைஞன் மீரா கதிரவன்.

அவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும். அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு. உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான […]

Continue Reading

விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது […]

Continue Reading

கள்வர்களின் காலமாக மாறிவிட்டது : தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் விழித்திரு படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் மீரா கதிரவனின் இரண்டாவது படமான  “விழித்திரு” திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து வெளியாகியுள்ளது. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் கற்காமல் இலக்கியம், அரசியல் புரிதலுடன் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி பெற்றவர் இவர். சிறந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த […]

Continue Reading

விழித்திரு விமர்சனம்!

விழித்திரு. 2012 இல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் கடந்து வெளிவந்திருக்கிறது. இவ்வளவு தடைக்கற்களைத் தாண்டி வந்தபின்னும் பாருங்கள், விழித்திரு மழையிடம் சிக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசம் தான். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக ஒரு படத்தை எடுத்தே ஆகவேண்டும் என தீர்க்கமான ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, படைப்பாளியாக நின்ற மீரா கதிரவனின் நம்பிக்கைக்கு முதலில் வாழ்த்துகள். “அவள் பெயர் தமிழரசி” விமர்சன ரீதியில் நல்ல பெயரைத் தந்திருந்தாலும் இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய இடைவெளி மீரா கதிரவனுக்கு. ஒரு இரவில் வெவ்வேறு […]

Continue Reading

டி ஆர் பேச்சால் கலங்கிய தன்ஷிகா

மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் தன்ஷிகா […]

Continue Reading