சேராதோர் சேர்க என்று கமல் அழைப்பு

அடிமேல் அடி வைத்து, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை வேலைகளையும் மிகவும் சூதானமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல்வாதிகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து, மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வரை தேர்ந்த அரசியல்வாதியை விட, மிக நுணுக்கமாக காய்களை நகர்த்துகிறார். கொள்கை கருத்தியல் என்னவென்றே அறிவிக்காமல், கூட்டத்தை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது பிறந்தநாளான நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு, மையம் விசில் என்ற ஒரு செயலியின் பேரை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, பட […]

Continue Reading

ஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?

2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது. சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் […]

Continue Reading

கமலின் ஜாதகம் கணித்த பண்டிட்

பிரபல சோதிடர் ராடன் பண்டிட் கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கட்சி செயல் தலைவரான ஸ்டாலினை விடவும் அதிக வெற்றிகளை பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப் போல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . மேலும் கமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்றாலும் தனது வாழ்க்கையை இன்னும் வாழவில்லை எனவும் ,அவர் இனிமேல் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்காக வாழும் வாழ்க்கை என தெரிவித்துள்ளார். […]

Continue Reading

இனியும் அப்படி கேட்காதீர்கள் : கமல்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நல்லது செய்வதையும் பண்பறிந்து வெகு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்லது செய்தால் மட்டும் போதாது, அதை சரியாக, சரியான மக்களுக்கு செய்ய வேண்டும். நல்லதை சரியாக செய்தால் தான் அது அரசியல். அந்த வகையில் தானத்தை தவறான ஆட்களிடம் கொடுப்பது கூட ஒரு தவறுதான். நான் […]

Continue Reading

முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் : கமல்ஹாசன்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல், “மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ […]

Continue Reading

புதுயுகம் செய்ய புறப்பட்ட கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இன்று 63-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில், அதற்கான காரணத்தை நேற்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு… நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். […]

Continue Reading

ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு – விசு ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று சொல்ல முடியாது’ என்ற கருத்திற்கு, இந்தியாவில் பல முனைகளில் இருந்தும் கண்டனக் குரல்களும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கமலின் கருத்திற்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமாகிய விசு கமலின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் […]

Continue Reading

ஆபத்துக்கு பாவம் இல்லை : கமல்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு சென்று அங்கு கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பகுதியை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, அனல் மின் நிலைய சாம்பல் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வட சென்னைக்கு மழையால் வெள்ளம் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும், வெள்ளப்பகுதிகளுக்கு சென்று பல்வேறு உதவிகளை […]

Continue Reading

அனுதாபமும், நிதியுதவியும் போதாது : கமல்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

Continue Reading