திரையுலக நலனுக்காக பேரணி !… மக்கள் நலனுக்காக ?….

ஒரு பக்கம் ஸ்டெர்லைட்.. ஒரு பக்கம் காவேரி.. என தமிழ்நாடே தகித்துக் கொண்டிருக்க, தமிழ்த் திரையுலகமோ 4-ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்லவிருப்பதாய் அறிவித்திருக்கிறது. உண்மையிலேயே சினிமா இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட “மோனோபோலி” சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்து விட்டது “கியூப்”. அவர்களை மீறி எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்கிற சூழல். அதனால் தான் வழக்கமாக விஷாலுடன் முட்டிக்கொண்டு நிற்கும் தயாரிப்பாளர்கள் கூட இந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக […]

Continue Reading

விபத்தில் சிக்கினார் பிரதமர் மோடியின் மனைவி

ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த சாலை விபத்தில் ஜசோதா பென்னின் உறவினரான வசந்த்பாய் மோடி என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ஜசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜசோதாபெனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரா மாவட்டத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்று விட்டு குஜராத்திற்கு […]

Continue Reading

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8.15 மணி நிலவரப்படி பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. […]

Continue Reading

அன்பிற்குரிய மோடி அவர்களே!

இந்தியாவின் கிளைகளாக பரவிக்கிடக்கும் கிராமப்புற, ஏழை, எளிய மக்களின் குரல் மோடிக்கு கேட்கிறதா? என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சல்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் அரசியல் சூழலை நிர்ணயிக்கும் என எதிர்பார்த்த குஜராத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “அன்பிற்குரிய மோடி […]

Continue Reading

முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய குஜராத் தேர்தல்

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். முதற்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து […]

Continue Reading

தீவுகளையெல்லாம் சிங்கப்பூராக மாற்றும் திட்டத்துடன் மோடி

குஜராத் சட்டசபைக்கு வருகிற 9,14-ந் தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நேற்றும் இன்றும் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நேற்று நர்மதா நதிக் கரையில் அமோத் சர்க்கரை ஆலை அருகில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மும்பை- அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசை […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு ப சிதம்பரம் கேள்வி

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத்தில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குஜராத்தில் ஜஸ்தான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘‘டீ விற்ற ஒருவர் நாட்டின் பிரதமர் ஆனதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் […]

Continue Reading

10 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றார். அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் லீ கெசி யாங் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் 69-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசியான் நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆசியாவில் 10 நாடுகள் உள்ளன. மோடியின் இந்த அழைப்பை 10 நாட்டு தலைவர்களும் […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கருத்துக்கணிப்பின் முடிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை ஆன்லைன் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர். இதில், ஒட்டுமொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர். […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் முன்னோடியாக தினத்தந்தி : பிரதமர் மோடி

இன்று தினத்தந்தி நாளிதழின் பவள விழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ‘அனைவருக்கும் வணக்கம், தினத்தந்தி 75-வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தமிழில் பேசி மோடி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எளிய முறையில் செய்திகளை […]

Continue Reading