அருவி யார் மனதை புண்படுத்தினாள்?

ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும், பத்திரிக்கைகளும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொ ண்டிருக்கும் திரைப்படம் “அருவி”. போலித்தனம் இல்லாத ஒரு சினிமாவாக, தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கும் “அருவி” படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். ‘அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!’’ என பொதுப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு, […]

Continue Reading

அருவி – விமர்சனம்!

மலைமுகட்டின் மேலிருந்து பிரவாகமெடுக்கிற நீர்த்திரள்கள் இணைந்து இருப்பிடம் தேடி சரிந்து விழும். அது தான் அருவியின் ஆரம்பம்!. அத்தோடு நின்றுவிடுவதில்லை அந்த அருவி. அது பயணிக்கிற இடமெல்லாம் பசுமையை இரைத்துப் போகிறது, தன் ஈரம் மிச்சமிருக்கிற கடைசி தடம் வரையிலும். அப்படித் தான் இந்த அருவியும் உணர்வுகளின் திரளாய், தான் பயணிக்கிற இடமெங்கிலும் அன்பை விதைத்துப் போகிறாள். உயிர் வாழ்கிற கடைசி நொடி வரையிலும்! பொதுவாகவே இந்த சமூகம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து எப்போதுமே விவாதிக்க […]

Continue Reading

பெண்களை சந்திக்க ஆடிசனா? : எஸ் ஆர் பிரபு

அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசிய போது, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டணி!

வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் […]

Continue Reading

வேட்டைக்குத் தயாராகும் கார்த்தி!

சதுரங்க வேட்டை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் H.வினோத் உருவாக்கியிருக்கும் படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. 1995 லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு உண்மையான க்ரைம் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள தீரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான ட்ரைலர் வெளியாகி அனைத்து […]

Continue Reading