சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள்.  கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார். மேலும் அவர் கரியரில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், […]

Continue Reading

கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு

ரெதான் நிறுவனத்தின் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. 1990 – 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், […]

Continue Reading

சுசீந்திரன் இயக்கும் “கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக 2கோடி செலவு

  இந்தியா முழுவதிலும் இருந்து நிஜ பெண் கபடி வீரர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பரபரப்பான படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை நோக்கி கென்னடிகிளப் .  சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து  நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் […]

Continue Reading

மரணத்தின் பிடியில் தமிழ் சினிமா!

பொதுவாகவே எல்லா வர்க்கத்தினரும் கடனாளிகளாக வாழ்பவர்கள் தான். திருநெல்வேலி நாச்சிமுத்து மட்டுமல்ல உலக பணக்காரராக இருக்கும் நம் அண்ணன் அம்பானி கூட கடனாளி தான். தயாரிப்பாளர் அஷோக் குமார் மட்டுமல்ல மூன்று முதல்வர்களைக் கொண்ட நம் தமிழக அரசும் கூட கடனாளி தான். இங்கு எல்லா வகையான தவறுகளுமே மிக இயல்பாகவே நடந்துகொண்டு தான் இருக்கிறது, கண்டு கொள்ளவோ எதிர்த்துக் கேட்கவோ ஆளே இல்லாமல்.அப்படியே யாராவது அத்தகைய அநீதிகளுக்கு எதிராக போராடினாலும் அதை வெறும் செய்தியாக மட்டுமே […]

Continue Reading

தயாரிப்பாளர் அசோக்குமார் – கடைசி கடிதம்!

சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்; மன்னித்துவிடு சசி என்று தற்கொலை செய்துகொள்வதற்கு அசோக்குமார் உருக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறார். நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து அசோக்குமார் எழுதிய கடிதத்தில், ”என்னை கோழை, சுயநலக்காரன் […]

Continue Reading

மீசையை முறுக்கு.. சசி குமாரை நொறுக்கு!

முன்னோரு காலத்தில் நாட்டாமை வேடம் என்றாலே எல்லா இயக்குநர்களும் நேராக விஜய குமார் வீட்டிற்குப் போய் விடுவார்கள். விஜய குமார் முடியாதென்றால் தான் வினு சக்ரவர்த்தி, சண்முக சுந்தரம் எல்லாம்! அதேபோல் காதல் கதைகளோடு நவரச நாயகன் கார்த்திக் வீட்டின் முன்னால் காத்துக் கிடந்த இயக்குநர்கள் ஏராளம் ஏராளம். அந்த வகையில் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களில் இருந்து “மண் பெருமை” பேசக்கூடிய கதைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் உலவும் இயக்குநர்களின் முதல் தேர்வும், […]

Continue Reading