“விமர்சனத்தை ஏற்காமல் புகார் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை” ; சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் […]

Continue Reading

200 பெண் காவலர்களால் பாராட்டப்பட்ட ‘மிக மிக அவசரம்’..!!

ஒரு தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் பெண் காவலர்களின் […]

Continue Reading

கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையைப் படமாக்கும் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்கவிருக்கிறார். ’திரைக்கதை உருவாக்க பணிகள் சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பின்னர் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள், படத்தின் பெயர் முடிவு செய்யப்படும். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்படும்’ என்று கூறி இருக்கும் அவர், அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக இயக்கப் போகிறார். இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி […]

Continue Reading

கிராஸ் ரூட்டுடன் கைகோர்க்கும் கிளாப் போர்டு

சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்.. அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது. பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும், […]

Continue Reading

வெற்றிமாறன் பேனரில் புதிய படம்

‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய […]

Continue Reading

இவர்களையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய அவமானமாக உள்ளது : டி ராஜேந்தர்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர். இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் […]

Continue Reading

விஷாலுக்கு சவால் விட்ட சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விசயங்கள் தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. […]

Continue Reading

பேசாதவரையும் பேச வைத்த பைனான்சியர்

தற்போதைய தமிழ்ப் படவுலகில் நிலவிவரும் இறுக்கமான சூழ்நிலை குறித்து ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல ஒரு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே இல்லை. சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன் கண்டிப்பாகத் தேவை.” என்றார். தேவயானி, “பார்க்காமலே பணம் கொடுக்கும் பைனான்சியர் என்றால் அது அன்பு செழியன் தான். காதலுடன் என்ற படத்துக்காக நாங்கள் அவரிடம் கடன் வாங்கினோம். ஆனால் […]

Continue Reading

ஆறு அத்தியாயத்தில் அரசை கலாய்த்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 6 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கியுள்ள “6 அத்தியாயம்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் மட்டுமே செய்யப்பட்டு வந்த “அந்தாலஜி” பாணியிலான திரைப்படத்தை 6 வெவ்வேறு குழுக்களை வைத்து ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா […]

Continue Reading