படம் பார்க்கும் ஆவலுடன் கெளதம் மேனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் தற்போது `நரகாசூரன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து கெளதம் மேனன் டுவிட்டரில் […]

Continue Reading

நாங்கள் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் : கோபி நயினார்

இயக்குநர் பா ரஞ்சித் அறம் படம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவரது வாழ்த்து பதிவில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் பெயர் இடம்பெறாதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் கோபி நயினார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். […]

Continue Reading

சேராதோர் சேர்க என்று கமல் அழைப்பு

அடிமேல் அடி வைத்து, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை வேலைகளையும் மிகவும் சூதானமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல்வாதிகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து, மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வரை தேர்ந்த அரசியல்வாதியை விட, மிக நுணுக்கமாக காய்களை நகர்த்துகிறார். கொள்கை கருத்தியல் என்னவென்றே அறிவிக்காமல், கூட்டத்தை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது பிறந்தநாளான நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு, மையம் விசில் என்ற ஒரு செயலியின் பேரை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, பட […]

Continue Reading

ரைசா தெரிவித்த திருமணத்தகவல்

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து சத்யராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். இதனால் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக […]

Continue Reading

இனியும் அப்படி கேட்காதீர்கள் : கமல்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நல்லது செய்வதையும் பண்பறிந்து வெகு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்லது செய்தால் மட்டும் போதாது, அதை சரியாக, சரியான மக்களுக்கு செய்ய வேண்டும். நல்லதை சரியாக செய்தால் தான் அது அரசியல். அந்த வகையில் தானத்தை தவறான ஆட்களிடம் கொடுப்பது கூட ஒரு தவறுதான். நான் […]

Continue Reading

முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் : கமல்ஹாசன்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல், “மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ […]

Continue Reading

புதுயுகம் செய்ய புறப்பட்ட கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இன்று 63-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில், அதற்கான காரணத்தை நேற்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு… நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். […]

Continue Reading

பி வி சிந்து பகிர்ந்த மோசமான அனுபவம்

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 முறை பதக்கம் வென்ற மற்றும் உலக தர வரிசையில் 2ம் இடம் வகிப்பவரான பி வி சிந்து தனக்கு விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் பற்றி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விமான நிலைய பணியாளரான அஜீதேஷ் என்னிடம் மிக மோசமான மற்றும் கடுமையான முறையில் நடந்து கொண்டார். விமான பணிப்பெண் ஆசிமா அவரிடம் பயணியிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால், ஆசிமாவிடமும் […]

Continue Reading

அனுதாபமும், நிதியுதவியும் போதாது : கமல்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

Continue Reading

அமலாபாலின் இன்ஸ்டாகிராம் பதிவு

பிரபல நடிகை அமலாபால் ஒன்றரை கோடிக்கு வாங்கிய காரை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் உத்தரவிட்டிருந்தார். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்திருந்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அந்நிலையில் அமலாபாலின் கார் சட்டப்படி தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் வரி ஏய்ப்பு […]

Continue Reading