தானா சேர்ந்த கூட்டம் – அப்டேட்!

News
0
(0)

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், திரையரங்கு உரிமையும் அதிக விலைக்கு போயிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.