இசை வழியே ஒரு உரிமைக்குரல்.. மீண்டும் களமிறங்கும் பா.இரஞ்சித்!!

News
0
(0)

கடந்த ஜனவரி மாதம் சென்னையை மட்டுமல்லாது ஒட்டு மொத்த இசை உலகையும் அதிர வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்திருந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கானா + ராப் இசை நிகழ்ச்சி.

இசை வழியே மாபெரும் கருத்தியல் விவாதத்திற்கு வித்திட்ட அந்நிகழ்ச்சி பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றதோடு, சிந்திக்கவும் தூண்டியது.

இப்போது மீண்டும் தனது “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து நடத்தும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அதே சி.எஸ்.ஐ பெயின்ஸ் பள்ளி வளாகத்தில் நடத்த இருக்கிறார்.

சென்றமுறை போல் இல்லாது இந்த முறை ஒன்றிற்கும் மேற்பட்ட தனித்தனி இசைக்குழுவினர் பங்குபெற்று பாடல்களை வழங்க இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி வருகிற 14-04-2018 அன்று நடக்க இருக்கிறது. அனுமதி இலவசம்!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.