மீண்டும் ஒருமுறை வாகை சூடிய `வாகை சூட வா’

News
0
(0)

`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை இயக்கிய அவரது முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து, தனது அடுத்த படமாக `வாகை சூட வா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் விமல் – இனியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில் வெளியான பாடல்களும் மெகா ஹிட்டானது. கல்வியறிவில்லாத அனைத்து தரப்பினருக்கும் கல்வி முக்கியம். அனைவருக்கும் கல்வியை கற்றுத் தர துடிக்கும் ஒரு ஆசிரியரின் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றிருந்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளர், நடிகை, பாடகர், பாடலாசிரியர் என 4 பிலிம்ஃபேர் விருதுகளையும் இப்படம் பெற்றிருந்தது. இந்நிலையில், 6 வருடங்களுக்குப் பிறகு The Toulouse Indian Film Festival (FRANCE) 2017 விழாவில் சிறந்த படமாக `வாகை சூட வா’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.