பழம்பெரும் மலையாள நடிகை சாரதா நாயர் காலமானார்

News
0
(0)

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை சாரதா நாயர். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் பாட்டியாக இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் 92 வயதான சாரதா நாயர், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.