சூர்யா, விஷால் தான் எனக்கு பிடிக்கும் – விஜய் மில்டன்

News
0
(0)

பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகியப் படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக முத்திரை பதித்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கடுகு’.

இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்‌ஷா, பரத் சீனி ஆகியோர் நடித்துள்ளார்கள். ரப்நோட் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருணகிரி இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் மற்றும் ‘கடுகு’ படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் விஜய் மில்டன் பேசும்போது, ‘கடுகு’ படத்தில் ராஜகுமாரன் தான் ஹீரோ என்று சொன்னவுடன், என் நண்பர்கள் பலரும் வேண்டாம் என்று சொன்னார்கள். மேலும் எனக்கு என்ன ஆச்சி, ஏன் இப்படி படம் இயக்குகிறார். என்றும் பலரும் கேட்டனர். ஏன் நடிகர் ராஜகுமாரனும் என்னிடம் கேட்டார். ஆனால், படம் பார்க்கும் போது நான் அப்படி செய்தேன் என்று பலருக்கும் புரியும்.

ராஜகுமாரன் சிறந்த நடிகர். இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை எழுதும் போது என் நினைவுக்கு வந்தது முதலில் வந்தது பரத்தான். கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். பரத்தின் சினிமா உலகில் இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

என் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி. படத்தை பார்த்த சூர்யா மிகவும் பிடித்து போய், நான் வெளியிடுகிறேன் என்று சொன்னது சந்தோஷமாக இருந்தது. சினிமாவையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்வதில் எனக்கு சூர்யா, விஷாலை ரொம்ப பிடிக்கும். சூர்யா ‘அகரம்’ தொண்டு நிறுவனம் மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதுபோல், விஷாலும் தனிப்பட்ட முறையில் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்’ என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *