100-வது படத்தில் விஜய் – சமந்தா

News
0
(0)

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதன்படி, தற்போது விஷாலுடன் ‘இரும்பு திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கண்கள்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுன் மாதத்தில் சமந்தா கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமொன்றிலும், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்-அட்லி கூட்டணி தற்போது ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இம்மாத இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பியதும் விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.