வேதாளம் கதை கருவுடன் விக்ரம் வேதா

News
0
(0)

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி நடிக்கும் படம் ‘விக்ரம் வேதா’. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் பேசிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, “விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாக்கி இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் மாதவன் போலீசாகவும், விஜய்சேதுபதி தாதாவாகவும் நடித்து இருக்கிறார்கள். மாதவன் தாடி வைத்த கெட்அப்பில் வருகிறார்.” என்றார்கள்.

மாதவனுடன் நடித்தது பற்றி பேசிய விஜய்சேதுபதி, “இந்த படத்தில் மாதவனுடன் நடித்தது நல்ல அனுபவம். சீனியர் நடிகர் என்று முதலில் பயந்தேன். ஆனால் அவர் உற்சாகம் அளித்தார். வரலட்சுமி எப்போதும் படபடவென்று பேசுவார். இந்த படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. அதற்காக வருத்தப்படவில்லை” என்று கூறினார்.

படம் பற்றி கூறிய மாதவன், “இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு தமிழில் இதில் நடித்திருக்கிறேன். முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிக்கும்போது எங்களிடம் எந்த ‘ஈகோ’வும் இல்லை. சில வி‌ஷயங்களில் அவரிடம் இருந்து நிறைய கற்றிருக்கிறேன். அவர் ரசிகர்களை சந்தித்து வருவது நல்ல வி‌ஷயம். இது உறவைப் பற்றிய படம்” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.