அனிருத், ஷான் ரோல்டனை அடுத்து?

News
0
(0)

தனுஷ் நடிப்பில் உருவான ‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘கொலை வெறி…’ பாடலும், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் டைட்டில் பாடலும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு பெற்றது.

தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதில் அனிருத்திற்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அனிருத்திற்கு பதிலாக ஷான் ரோல்டனை தேர்வு செய்தது குறித்து நடிகர் தனுஷ் கூறும்போது, ‘முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தின் கதையம்சம் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட வேண்டியது என்பதால் ஷான் ரோல்டனின் இசையை தேர்ந்தெடுத்தேன்’ என்றார்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் 3, 4 ஆம் பாகங்கள் உருவாக இருக்கிறது. இன்னும் கதை எழுத ஆரம்பிக்க வில்லை. அக்கதையை முடித்தபின் அந்த பாகத்திற்கு அனிருத்தோ, ஷான் ரோல்டனோ, அல்லது வேறு யாருடைய இசை சரியாக இருக்குமோ அவர்களை தேர்வு செய்வேன் என்றும் தனுஷ் கூறியிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.