மக்கள் அனுமதியுடன் அவர்கள் அந்தரங்கம் திருடுபோகும் அவலத்தை சொல்லும் ‘x வீடியோஸ்’!

News
0
(0)

கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.

இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையத்தளத்திற்கு பக்கபலமாக செயல்படுவை மொபைல் ‘ஆப்’கள் (Apps ) தான்.. இன்று தொட்டதற்கெல்லாம் ஆப் உபயோகப்படுத்துகிறார்கள்.. அவற்றை உங்கள் மொபைல் போனில் உள்ளீடு செய்யும்போதே உங்கள் போனில் உள்ள உங்களது அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்வோம் என கூறி உங்கள் அனுமதியுடன் தான் அவர்கள் உங்கள் அந்தரங்கத்தில் கால் வைக்கிறார்கள். மிகப்பயங்கரமான தகவல் திருட்டை உங்கள் அனுமதியுடனேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.. இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் இருக்கிறது.. இன்று தொண்ணூறு சதவீதம் மொபைல் ‘ஆப்’கள் (Apps ) பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளம் முக்கிய கருவியாக இருக்கிறது.

பொத்தாம் பொதுவாக இந்த குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை.. இல்லை, நான் சொல்வது தவறு என சொல்லிக்கொண்டு யாரையாவது வரச்சொல்லுங்கள் பார்ப்போம்.. அப்படி இதுவரை இந்த கருத்தை எதிர்த்து ஒருவரும் வரவில்லை. வரவும் மாட்டார்கள்.. காரணம் அதுதான் உண்மை.

இயக்குனராக எனக்கு இது முதல் படம்.. இந்தப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது.. இந்தப்படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது.. இந்தப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம்.. அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது..? ஆனால் இந்த ‘x வீடியோஸ்’ படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம்.

இது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்.. அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால் தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது.. இதுவரை படம் பார்த்த அனைவரிடமும் இருந்து பாராட்டுக்கள் மட்டுமே குவிந்துள்ளன. இனி படத்திற்கான வரவேற்பு மக்கள் கையில் தான் இருக்கிறது.. அவர்கள் என் மீது கல்லெறிகிறார்களா இல்லை பூக்களை வீசுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்..

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.